உலகம்
2030 இல் தீவிர வறுமையில் தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்!
2030 இல் தீவிர வறுமையில் தள்ளப்படும் மில்லியன் கணக்கான மக்கள்!
ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாய மேலாண்மை அலுவலகம் (UNODC), 2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்.
பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 ஆம்திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருள் ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதாகும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை