உலகம்

இந்தியா சிறந்த நாடு – காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்!

Published

on

இந்தியா சிறந்த நாடு – காசா உச்சி மாநாட்டில் புகழ்ந்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி முன்னிலையில், வரலாற்று சிறப்புமிக்க காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப், அப்தெல் பட்டா அல் சிசியுடன் துருக்கி அதிபர் எர்டோகன், கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். 

 இந்த உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவையும், பிரதமர் மோடியையும்  புகழ்ந்துள்ளார். அவர் உரையாற்றும் போது இந்தியா மிகவும் சிறந்த நாடு. என் நல்ல நண்பர் என்ற பட்டியலில் உச்சத்தில் இருப்பவர் பிரதமர் மோடி. அவர் அற்புதமான ஒரு வேலையை செய்திருக்கிறார். பாகிஸ்தானும், இந்தியாவும் மிகவும் நன்றாக வாழப்போகிறார்கள். என்னை பொறுத்தவரை அவர்கள் இருவரும் சிறந்த தலைவர்கள் என்று நினைக்கிறேன் என டிரம்ப் பேசினார். பின்னர் தொடர்ந்து உரையாற்றிய டிரம்ப், பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை கைகாட்டி, இந்தியா, பாக்பாகிஸ்தானின் ,அணுசக்தி மோதலை தடுத்ததற்கு அவரை பாராட்டினார். இந்த மனிதர் இல்லை என்றால், அந்த 4 நாட்களில் என்ன நடந்தது என்று யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு போர்ச்சூழல் அதிகரித்து இருக்கும் என்றும் கூறினார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version