இலங்கை

பாடசாலை ஒன்றுக்கருகில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

Published

on

பாடசாலை ஒன்றுக்கருகில் பெருந்தொகை தோட்டாக்கள் மீட்பு

  தலாவ, ரத்மல்கஹவெவ பாடசாலையொன்றுக்கருகில் பாரியளவிலான தோட்டாக்கள், வெற்றுத் தோட்டா உறைகள் இன்று (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில் சுமார் 15,000 வெற்றுத் தோட்டா உறைகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

முந்துனேகமப் பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் வெடிமருந்து தொகுதியொன்று இருப்பதாக தம்புத்தேகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த தோட்டாக்களில் பல சிதைவடைந்து காணப்பட்டமையால் பல வருடங்களுக்கு முன்பு அவை அப் பகுதியில் போடப்பட்டிருக்கலாம் , இராணுவ அல்லது பொலிஸ் பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களைக் கொண்டு வந்து இங்கே போட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version