வணிகம்

பி.எஃப் கணக்கில் 100% வரை பணம் எடுக்க அனுமதி; ஆன்லைன் மூலமே எடுக்க சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ…

Published

on

பி.எஃப் கணக்கில் 100% வரை பணம் எடுக்க அனுமதி; ஆன்லைன் மூலமே எடுக்க சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ…

இந்தியாவில் கோடிக்கணக்கான ஊழியர்களுக்குப் பெரிய நிம்மதியளிக்கும் வகையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) விதிகளைத் தளர்த்தி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, அவசரத் தேவைகளுக்காக பி.எஃப். பணத்தை எடுப்பது முன்பை விட மிக மிக எளிதாகிவிட்டது. முக்கியமாக, கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கான பணம் எடுக்கும் வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.என்னென்ன முக்கிய மாற்றங்கள்?கல்வி மற்றும் திருமணத்திற்கு அதிக முறை பணம் எடுக்க அனுமதி:கல்வித் தேவைகளுக்காக இனி 10 முறை வரையிலும், திருமணச் செலவுகளுக்காக 5 முறை வரையிலும் பி.எஃப். தொகையை பகுதிவாரியாக எடுக்கலாம். முன்பு, கல்வி மற்றும் திருமணம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த புதிய தளர்வு, பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் குடும்பத் திருமணச் செலவுகளுக்கு ஊழியர்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது.சிறப்புச் சூழ்நிலைகள்இதுவரை, எதிர்பாராத வெள்ளம், தொற்றுநோய் அல்லது நிறுவனத்தின் பூட்டுதல் போன்ற ‘சிறப்புச் சூழ்நிலைகளில்’ பணம் எடுக்க, அதற்கான காரணத்தையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஏற்படும் சிக்கல்களால் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.இனி, இந்த வகையின் கீழ் பணம் எடுக்க விண்ணப்பிக்கும்போது, ஊழியர்கள் அதற்கான காரணத்தை விளக்க வேண்டிய அவசியமே இல்லை என்று அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, பணம் எடுக்கும் செயல்முறையை அதிவேகமாகவும், சிக்கலற்றதாகவும் மாற்றியுள்ளது.குறைந்தபட்ச சேவைக்காலம் குறைப்புவீடு, கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்காகப் பி.எஃப். பணம் எடுக்க, முன்பு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை குறைந்தபட்ச சேவைக்காலம் தேவைப்பட்டது.மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையிலான வாரியம், அனைத்து வகையான பகுதிவாரியான பணம் எடுப்பிற்கும், குறைந்தபட்ச சேவைக்காலத்தை வெறும் 12 மாதங்களாகக் குறைத்து ஒப்புதல் அளித்துள்ளது.பி.எஃப். பணத்தை ஆன்லைனில் எடுப்பது எப்படி? பி.எஃப். தொகையை ஆன்லைனில் எடுக்க, உங்கள் யு.ஏ.என் (UAN) எண்ணுடன் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டிருப்பது அவசியம்.தேவையான ஆவணங்கள்:ஆன்லைன் மூலம் பணம் எடுக்கும் முறை:படி 1: அதிகாரப்பூர்வ யு.ஏ.என். போர்ட்டலுக்குச் செல்லவும். படி 2: யு.ஏ.என். மற்றும் பாஸ்வேர்ட் எண்டர் செய்து லாக் இன் செய்யுங்கள்.படி 3: ‘Manage’ டேபில் சென்று ‘KYC’ விவரங்கள் (ஆதார், பான், வங்கி) அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.படி 4: ‘Online Services’ டேபில், ‘Claim’ என்பதைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தைத் தொடங்கவும்.படி 5: உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு, ‘Verify’ செய்யவும்.படி 6: உறுதிமொழிச் சான்றிதழை ஒப்புக்கொண்டு, ‘Yes’ கிளிக் செய்யவும்.படி 7: ‘Proceed for Online Claim’ என்பதைத் தேர்ந்தெடுத்து அடுத்த படிக்குச் செல்லவும்.படி 8: க்ளைம் படிவத்தில், நீங்கள் எடுக்க விரும்பும் ‘க்ளைம் வகையை’ (கல்வி/திருமணம்/சிறப்புச் சூழ்நிலைகள்) தேர்ந்தெடுக்கவும்.படி 9: உங்கள் விண்ணப்பத்தை இறுதி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றிச் சமர்ப்பிக்கவும்.இந்த புதிய விதிகள் கோடிக்கணக்கான ஊழியர்களுக்குப் பெரிய நிதிச் சுதந்திரத்தையும், நிம்மதியையும் அளித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை! இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? புதிய விதிகளைப் பயன்படுத்தி, உங்கள் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version