இலங்கை
மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித்தகவல்!
மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித்தகவல்!
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எந்த வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின் கட்டணத்தில் எந்த வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தமானது அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே அவர் இந்த அறிவிப்பை தெரிவித்தார்.