இலங்கை
மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!
2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோதே பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் ,இந்த அறிவிப்பை வெளியிட்டார்.