இலங்கை
வெள்ளைக்கொடி விவகாரம்; பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை -பணிகின்றது பெரமுன
வெள்ளைக்கொடி விவகாரம்; பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை -பணிகின்றது பெரமுன
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது. இறுதிப்போரின் போது வெள்ளைக் கொடிகளுடன் வந்தோரை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என்றும், புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ச பணம் வழங்கினார் என்றும் பொன்சேகா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றார். இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகரவிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
இதன்போதே,பொன்சேகா யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரின் நோக்கம் என்ன? என்று மக்களுக்குத் தெரியும். எனவே இந்த விடயத்தில் கருத்துக்கூற வேண்டிய அவசியம் பொதுஜன பெரமுனவுக்கு எழவில்லை என்று சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.