இலங்கை

இன்றைய வானிலை தொடர்பான அறிக்கை!

Published

on

இன்றைய வானிலை தொடர்பான அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு மேலாக வளிமண்டல தளம்பல் நிலை காணப்படுகின்றது.அதாவது வட அரைக் கோளத்தில் இருந்தும் தென் அரைக் கோளத்தில் இருந்தும் காற்றழுத்தம்   காரணமாக நாட்டின் வானிலையில் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது. ஆனபடியினால் இன்று முதல் சில நாட்களுக்கு  நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை அதிகரித்தே  காணப்படும்.

Advertisement

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும், மேல், தென் மற்றும் வட மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனால் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.  

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version