இலங்கை
எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்களின் நிலமை !
எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு – நோயாளர்களின் நிலமை !
கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேனரில் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இதன்காரணமாக நோயாளர் பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கண்டி மருத்துவமனையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு பெறப்பட்ட போதிலும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.