இலங்கை

மகனும் மகளும் காதல்; தாய் தந்தை மீது தாக்குதல்

Published

on

மகனும் மகளும் காதல்; தாய் தந்தை மீது தாக்குதல்

  பிபில, ரதுபஸ்கெட்டிய பிரதேசத்தில் தனது மகனுடனான காதலை நிறுத்துமாறு கூறி 66 வயதுடைய நபரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் திங்கட்கிழமை (13) அன்று இடம்பெற்றுள்ளது.

பிபில, ரதுபஸ்கெட்டிய, கல்கேலந்த வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தாக்குதலுக்குள்ளான நபரின் மகள், சந்தேக நபரின் மகனுடன் காதல் உறவில் இருந்த நிலையில் அதை நிறுத்துமாறு காதலனின் தந்தை பெண்ணின் வீட்டிற்கு வந்து கூறியுள்ளார்.

அதன் பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து, சந்தேக நபர் கத்தியை எடுத்து வந்து பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளதுடன் இதனால் அவரது கையின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நபர், மற்றும்அவரது மனைவி மற்றும் பிரதேசவாசிகளால் சுவசெரிய ஆம்புலன்ஸ் மூலம் பிபில அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் , பிபில பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version