இலங்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விநியோகம் – 25 மில்லியன் அபராதம் வசூல்!

Published

on

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விநியோகம் – 25 மில்லியன் அபராதம் வசூல்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான 6 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து இந்த அபராதங்கள் வசூலிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

Advertisement

 அந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் 306 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்தன. 

 அதன்படி, எதிர்காலத்தில் இந்த சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version