இலங்கை

தங்காலையில் படகில் களியாட்டம்: நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Published

on

தங்காலையில் படகில் களியாட்டம்: நீரில் மூழ்கி ஒருவர் பலி!

தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

உயிரிழந்தவர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

இவர் நண்பர்களுடன் இணைந்து படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுள்ள நிலையில் படகிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version