இலங்கை

பொலிஸார் அதிரடியில் இளம் கணவனும் மனைவியும் கைது!

Published

on

பொலிஸார் அதிரடியில் இளம் கணவனும் மனைவியும் கைது!

   அநுராதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவனும் மனைவியும் அநுராதபுரம் பொலிஸாரால் (13) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம் பிள்ளையார் சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் – துருவில பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய கணவனும் 25 வயதுடைய மனைவியும் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 97 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான தம்பதியை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவினை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version