இலங்கை
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்த மீன் வியாபாரி
யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்த மீன் வியாபாரி
யாழ்ப்பாணத்தில் அல்லைப்பிட்டியை சேர்ந்த மோட்டார் சைக்கிளை சொகுசு பேருந்து மோதியதில் மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை
சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற சொகுசு பேருந்து மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம், யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.