இலங்கை
யாழில் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
யாழில் வீடொன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம்!
யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வயது 74 வயதான மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை, அயல் வீட்டார்கள் கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, பொலிஸாரின் உதவி பெறப்பட்டு, உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
மரண விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.