இலங்கை

வீட்டுக்குள் மறைத்து வைத்து கஞ்சா வளர்த்த கில்லாடி!

Published

on

வீட்டுக்குள் மறைத்து வைத்து கஞ்சா வளர்த்த கில்லாடி!

 வீடொன்றில் மறைத்து வைத்து சாடிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் யக்கலமுல்ல பொலிஸாரால் நேற்று முன் தினம் (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காலியில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பல கொட்டவகம நிதஹஸ் மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இவ்வாரு கஞ்சா வளர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

யக்கலமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version