இலங்கை

குரல் பதிவுகள் விவகாரம் ; சரத் பொன்சேகாவுக்கு நாமல் சவால்

Published

on

குரல் பதிவுகள் விவகாரம் ; சரத் பொன்சேகாவுக்கு நாமல் சவால்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொலிகள் இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் மற்றும் காணொலி வெளியிடும் விவகாரம் என்பன தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“சரத் பொன்சேகாவின் இயல்பு அது. முன்னரும் அவர் அப்படிதான்.

குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும். அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது.

Advertisement

கோட்டாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருக்கக்கூடும். ஆக அதை வெளியிட்டால் தற்போது சரத் பொன்சேகாவை நம்புபவர்களின் நிலை என்னவென்று சொல்வது?.” – என்றார்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version