இலங்கை

நுகேகொட பாபி வெளியிட்ட தகவல்; கைக்குண்டு , தோட்டாக்கள் மீட்பு

Published

on

நுகேகொட பாபி வெளியிட்ட தகவல்; கைக்குண்டு , தோட்டாக்கள் மீட்பு

  கனேமுல்லை கொலை சம்பவத்தில் நேபாளத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டு மற்றும் பத்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Advertisement

சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு முன்பு, அந்த நிலத்தில் உள்ள வாழை மரத்தின் கீழ் நேரடி வெடிகுண்டு மற்றும் தோட்டாக்களை புதைத்து வைத்திருந்தமை

சந்தேக நபர் தொடர்பாக மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிகுணு, மேற்கு மாகாண தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர் ஜனக குமார மற்றும் பிற அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version