இலங்கை
நேற்றுய தினம் 5,000க்கும் அதிகமானோர் கைது!
நேற்றுய தினம் 5,000க்கும் அதிகமானோர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 5,221 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 17 பேரும், சந்தேகத்தின் பேரில் 630 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 299 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 153 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 88 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 14 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4020 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.