இலங்கை
செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய பெண் ஒருவர் தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்த நிலையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் .
கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மேலும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.