இலங்கை
பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது
பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் நூற்றுக்கணக்கானோர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 654 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் – 28,701, குற்றச்செயல்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் – 24, பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 303, திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் – 141, மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் – 11, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியவர்கள் – 17