இலங்கை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரசபையில் நிறைவேறிய துப்பாக்கி கொள்வனவு தீர்மானம்

Published

on

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரசபையில் நிறைவேறிய துப்பாக்கி கொள்வனவு தீர்மானம்

குரங்குகளை கட்டடுப்படுத்த சாவகச்சேரி சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கி வழங்குவதற்கு நகரசபை அமர்வில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகளை (Air Riffle) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் மாதாந்த அமர்வில் முன்வைத்தார்.

Advertisement

உபதவிசாளரினால் கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய, குரங்குத் தொல்லையைக் கட்டுப்படுத்த நகரசபையின் நிதியிலிருந்து இயங்கும் நிலையில் உள்ள சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையைச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதையடுத்து, நகரசபை நிதியில் இருந்து துப்பாக்கிகளை உடனடியாக கொள்முதல் செய்ய ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் குறித்த பகுதியில் குரங்குகளால் ஏற்படும் இடையூறுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version