இலங்கை
குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
யாழில் நேற்றையதினம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 62வயதுடைய பொன்னம்பலம் கமலநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்த நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.