இலங்கை

தமிழர் பகுதியில் சம்பவம் ; நான்கு பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்

Published

on

தமிழர் பகுதியில் சம்பவம் ; நான்கு பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், இன்று (20) அதிகாலை நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, தகரத்தினால் அமைத்த அவ்வீட்டினுள் இருந்த நெல்லை உண்பதற்காகச் சென்ற காட்டுயானையை கண்டு, அப்பெண் பயத்தில் வெளியே ஓடியபோது யானை தாக்கியுள்ளது.

Advertisement

இதன்போது, அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தாய் எனவும் 58 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக, சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version