இலங்கை
நாட்டின் பல பகுதிகளிலும் 100மில்லிமீற்றர் மழை பெய்யும்!
நாட்டின் பல பகுதிகளிலும் 100மில்லிமீற்றர் மழை பெய்யும்!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
அந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை