இலங்கை
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் திடீரென கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் திடீரென கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், 20 போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.