இலங்கை
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.