இலங்கை

யாழ்ப்பாணத்தில் 29 பேர் அதிரடியாக கைது

Published

on

யாழ்ப்பாணத்தில் 29 பேர் அதிரடியாக கைது

  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இதன்போது , 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 90 லீட்டர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 29 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version