இலங்கை

யாழ்ப்பாண பொலிஸாரினால் 29 பேர் கைது!

Published

on

யாழ்ப்பாண பொலிஸாரினால் 29 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட  நடவடிக்கையின் போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 90 லீட்டர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ்  இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் 

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பொலிசாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 11பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version