சினிமா
தீராக் காதல், மறக்க முடியாத காதலன்… நாயகி எடுத்த முடிவு
தீராக் காதல், மறக்க முடியாத காதலன்… நாயகி எடுத்த முடிவு
தமிழ் சினிமாவில் 80, 90களில் கலக்கிய பல நடிகைகள் இன்னும் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள், அதில் ஒருவர் தான் நடிகை சித்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நாயகியாக படங்கள் நடித்தவர் தற்போது தரமான துணை கதாபாத்திரங்களை தேர்வு செய்தும் நடித்து வருகிறார். மலையாளத்தில் காவேரி என்ற தனது முதல் படத்திலேயே மம்முட்டி-மோகன்லாலுடன் இணைந்து நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.50 வயதிற்கு மேல் ஆகியும் நடிகை சித்தாரா திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். காரணம் அவர் ஒருவரை மனதார காதலித்துள்ளார், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இருந்தாலும் தனது காதலனை மறக்க முடியாத சித்தாரா திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறார்.