இலங்கை
சிறுவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்த அடித்தளம் இடுங்கள்;
சிறுவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்த அடித்தளம் இடுங்கள்;
வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!
சிறுவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. எனவே அவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர்தின நிகழ்வு. கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். சிறுவர்கள் மீதான முதலீடு, சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும்.
சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களுக்குத் தீங்கான எதையும் நாம் முன்னெடுக்கக் கூடாது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் பெற்றோரை இழந்த சிறுவர்கள் இருந்தனர். இன்றும் விபத்துகளால் பெற்றோரை இழந்து அநாதரவான நிலைமைக்கு சிறுவர்கள் தள்ளப்படுகின்றனர். எந்தவொரு சிறுவர்களுக்கும் ஆதரவில்லாத நிலைமை வரக்கூடாது. அவர்களின் எதிர்காலம் பாதிக்க அனுமதிக்க முடியாது. மாகாணத் திணைக்களம், சிறுவர் இல்லங்களைக் கண்காணித்து, சகல சிறுவர்களையும் அரவணைத்து அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும்-என்றார்.