இலங்கை
பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்த மாணவி உயிரிழப்பு!
பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்த மாணவி உயிரிழப்பு!
பலத்த மழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது. குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, அவர் பாதுகாப்பற்ற மதகில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து அவரை அவிசாவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.