இலங்கை
‘ரீவியை’ இயக்க முயன்ற மாற்றுத்திறனாளி மின்தாக்கி மரணம்
‘ரீவியை’ இயக்க முயன்ற மாற்றுத்திறனாளி மின்தாக்கி மரணம்
தொலைக்காட்சியை இயக்குவதற்காக வாயால் ‘பிளக்கை’ பொருத்திய மாற்றுத்திறனாளி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நாவந்துறையில் நடந்துள்ளது. பு.தேவபாலன் (வயது-47) என்பவரே உயிரிழந்தவராவார். இவருக்கு கை, கால்கள் இயங்காத நிலையில், தொலைக்காட்சி பார்ப்பதற்காக வாயால் “பிளக்கை” பொருத்தமுயன்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று கூறப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.