இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Published

on

வடக்கு மற்றும் கிழக்கில் 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

  வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டார்.

Advertisement

விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும் 586 ஏக்கர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த காணிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

அதேவேளை கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version