இலங்கை

இந்தியாவை உலுக்கிய சம்பவம்; பஸ் தீப்பிடித்து 25 பேர் உயிரிழப்பு

Published

on

இந்தியாவை உலுக்கிய சம்பவம்; பஸ் தீப்பிடித்து 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பஸ் ஒன்று தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வியாழக்கிழமை (23) இரவு பஸ் புறப்பட்டுள்ளது.இந்த பஸ்ஸில் 42 பேர் பயணித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (24) அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்குச் சென்ற சொகுசு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் கருகி உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலையில் இடம்பெற்ற இச்சமபவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version