இலங்கை

தவறான தடுப்பூசியால் பச்சிளம் குழந்தையின் கை பறிபோகும் நிலை

Published

on

தவறான தடுப்பூசியால் பச்சிளம் குழந்தையின் கை பறிபோகும் நிலை

   இந்தியாவில் , தவறான தடுப்பூசியால் பச்சிளம் குழந்தையின் கை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

Advertisement

அங்கு தடுப்பூசி போட்ட பின்னர் குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது முறைப்பாடு அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) பொலிஸ் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version