இலங்கை

யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

Published

on

யாழில் மீனவர் ஒருவர் உயிரிழப்பு!

  யாழ்ப்பாணம் – வடமராட்சியின்  கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Advertisement

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.  தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக அவரது  மனைவிக்கு தொலைபேசிமூலம்  தெரிவித்து  உதவிக்கு சிலரையும்  அழைத்துள்ளார். உடனடியாக இன்னொரு படகுமூலம்   உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

Advertisement

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவ இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version