இலங்கை

வங்களா விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்

Published

on

வங்களா விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்

வங்களா விரிகுடாவில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாக வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளிக்கிழமை அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்தத் தாழமுக்கம் வடக்கு, வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக எதிர்வரும் 25ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். ஆதலால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version