இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண்

Published

on

இலங்கைக்கு வருகை தந்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் “பெத்தி” (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் திரிஷா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராம் சரண் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இந்த நிலையில் பெத்தி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ராம் சரண் இலங்கையில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெத்தி திரைப்படம் 2026ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version