இலங்கை
கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்து!
கோப்பாய் சந்தியில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்து!
இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்தது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.