இலங்கை

பிரதேச சபையின் உப தலைவர் மீது கொடூர தாக்குதல்

Published

on

பிரதேச சபையின் உப தலைவர் மீது கொடூர தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

அவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உப தலைவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version