இலங்கை
மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்
மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்
இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
முப்பாய்ச்சல் (Triple Jump): பசிந்து மல்ஷான் (Pasindu Malshan) 16.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
இது இலங்கையின் முதல் தங்கப் பதக்கமாகும்.
ஆண்கள் 100 மீ ஓட்டம்: சமோத் யோதசிங்க (Chamod Yodasinghe) 10.30 வினாடிகளில் ஓடி, தங்கப் பதக்கம் வென்றதுடன், “வேகமான மனிதன்” (Fastest Man) என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது இந்தச் சாதனை சாம்பியன்ஷிப் போட்டி சாதனையை முறியடித்துள்ளது.
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் (Safiya Yamic) 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையையும் நிலைநாட்டினார்.
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் இனைத் தொடர்ந்து, அமஷா டி சில்வா (Amasha de Silva) 11.72 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம், பெண்கள் 100 மீ ஓட்டத்தில் இலங்கைக்கு முதல் இரண்டு இடங்களை உறுதி செய்தார்.
ஆண்கள் 5,000 மீ ஓட்டம்: முன்னதாக, விக்னராஜ் வக்ஷன் (Viknaraj Vakshan) 14:23.21 வினாடிகளில் ஓடி இலங்கையின் முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், ஆண்களுக்கான 100 மீ மற்றும் பெண்களுக்கான 100 மீ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இலங்கை தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.