இலங்கை

யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!

Published

on

யாழில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்!

யாழ்ப்பாண பிரதான அங்காடி கடைகள் அமைந்த இடமான கந்தப்பசேகர வீதி, பழைய கரன்தியேட்டர் அருகாமையில் உணவுக்கழிவுகள் போடப்படுவதால் அங்கு துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகரசபை உறுப்பினர்களான பிரதி முதல்வர் தயாளன், சாருஜன் மற்றும் சதீஸ்  ஆகியோர் குறித்த இடத்திற்கு நேரில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Advertisement

மேலும், குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கையாக கழிவுகள் அகற்றப்பட்டு, காணி உரிமையாளர்கள் இல்லதாவிடத்து மாநகரசபையால் சுற்றிவர வேலி அமைத்து, கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகரசபை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version