இலங்கை
2025 உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2025 உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அதற்கமைய , எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 பரீட்சை மையங்களில் பரீட்சை நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவேளை, பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை டிசம்பர் 6ஆம் திகதி, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியாக 1665 நிலையங்களில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.