இலங்கை

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

Published

on

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின்கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, இன்று( 26.10.2025 ) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கெகிராவ பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று 25ஆம் திகதி  தென் மாகாணம் முழுவதும் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version