இலங்கை

வடக்கில் இன்று 13 மணித்தியாலங்கள் மின் தடை

Published

on

வடக்கில் இன்று 13 மணித்தியாலங்கள் மின் தடை

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் தற்போது மின் தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தை மாற்றியமைப்பதற்கான வேலைகளுக்காகவே இன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மின் துண்டிக்கப்பட்டதால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்கள் முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பு உடனடியாக மீள வழங்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version