இலங்கை

கனமழை காரணமாக மாவட்டங்கள் 18 பாதிப்பு

Published

on

கனமழை காரணமாக மாவட்டங்கள் 18 பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாள்களாக நிலவும் பாதகமான வானிலை காரணமாக நாடுமுழுவதும் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை தொடர்ச்சியான மழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெய்த கனமழை காரணமாக நில்வலா கங்கை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர் மட்டத்தை அடைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version