இலங்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

Published

on

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

2025 ஆம் ஆண்டு கடந்த  பெப்ரவரி மாதம் முதல், மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

இதன்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25,873 பேரும், பெப்ரவரி மாதம் 22,271 பேரும்,  அத்துடன், மார்ச் மாதம் 21,552 பேரும், ஏப்ரல் மாதம் 22, 011 பேரும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குப் சென்றுள்ளனர்.  

இந்த பின்னணியில், 2025 ஆம் ஆண்டு கடந்த  ஜூன் மாதம் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைவடைந்து மொத்தமாக, ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 37 ஆக பதிவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version