இலங்கை

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

Published

on

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Advertisement

எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பரவியதாகவும் பின்னர் அத் தீயே விற்பனை நிலையம் முழுவதும் பரவியதாகவும் தெரிவிக்கின்றனர்.

     எனினும் தீ விபத்துக்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version