இந்தியா
கனடாவில் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் சுட்டுக் கொலை: யார் இந்த தர்ஷன் சிங் சாஹ்ஸி? பின்னணி என்ன?
கனடாவில் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் சுட்டுக் கொலை: யார் இந்த தர்ஷன் சிங் சாஹ்ஸி? பின்னணி என்ன?
ஆஷிமா குரோவர் எழுதியதுகனடாவில் வசித்து வந்த, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தர்ஷன் சிங் சாஹ்ஸி (Darshan Singh Sahsi), தனது வீட்டிற்கு வெளியே கார் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.அப்பட்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள ரிட்ஜ்வியூ டிரைவ் பகுதியில் திங்கள்கிழமை காலை (உள்ளூர் நேரம்) நடந்த இந்த கொடூரமான தாக்குதலில், 68 வயதான சாஹ்ஸி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.யார் இந்த தர்ஷன் சிங் சாஹ்ஸி?தர்ஷன் சிங் சாஹ்ஸி கனடா மற்றும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர்.இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தோர்ஹா பகுதியில் உள்ள ராஜ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் (NAPA) நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சஹால் கூற்றுப்படி, சாஹ்ஸி ஒரு ‘சுயம்பு’ தொழில்முனைவோர். இவர் கேனாம் இன்டர்நேஷனல் (Canam International) என்ற துணி மறுசுழற்சி (Clothing Recycling) நிறுவனத்தின் தலைவராக இருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேப்பிள் ரிட்ஜில் இவரது நிறுவனம் பெரிய அளவில் இயங்கி வந்தது.”சாஹ்ஸி தனது தொண்டு மனப்பான்மை மற்றும் சமூக சேவைக்காகப் பரவலாகப் பாராட்டப்பட்டார். அவரது நிறுவனம் உள்ளூர் பஞ்சாபி சமூக உறுப்பினர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்தது மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. சாஹ்ஸிக்கு இந்தியா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டிலும் வலுவான தொடர்புகள் இருந்தன, அங்கு அவர் முக்கிய வணிக நலன்களைப் பேணி, பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்தார். அவரது தலைமைத்துவமும் தாராள மனப்பான்மையும் அவரை இரு கண்டங்களிலும் மதிக்கப்படும் நபராக மாற்றியது,” என்றும் வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் தலைவர் சஹால் கூறினார்.ஒரு கோடீஸ்வரரின் அடக்கமான வாழ்க்கை சாஹ்ஸியை நீண்ட காலமாக அறிந்த பஞ்சாபி பத்திரிகையாளர் குர்பிரீத் சிங் சஹோதா, அவர் ஒரு “மிகவும் மென்மையான மனிதர். பல மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபர். ஆனால் ஒருபோதும் அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அவர் சமூகத்திற்கு மிகவும் உதவியாக இருந்தார்,” என்றார்.நடந்தது என்ன? பாதுகாப்பு வீடியோவில் பதிவான கொடூரம் அப்பட்ஸ்ஃபோர்ட் பகுதியில் உள்ள சாஹ்ஸியின் வீட்டிற்கு வெளியே நடந்த இந்தச் சம்பவம், சிபிசி செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த ஒரு வீட்டுப் பாதுகாப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.சாஹ்ஸி ஒரு கருப்பு நிற ட்ரக்கில் ஏறும் போது, தெருவின் மறுபுறத்தில் இருந்து ஒரு துப்பாக்கி ஏந்திய நபர் காரில் இருந்து இறங்கி வந்து, அவரை நோக்கி ஓடி வந்து சுட்டுள்ளார்.சம்பவம் நடந்த போது சாஹ்ஸி தனது மேப்பிள் ரிட்ஜ் ஆலையில் உள்ள தனது நிறுவனத்திற்கு (Canam International) வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்ததாக அவரது நண்பர் சஹோதா தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், விரைந்து வந்த அதிகாரிகள் சாஹ்ஸியை அவரது காருக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டனர். முதலுதவி அளித்த போதிலும், அவர் காயங்களால் உயிரிழந்தார்.கனடா காவல்துறை விசாரணை அப்பட்ஸ்ஃபோர்ட் காவல் துறை, இந்தச் சம்பவம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரே வாகனத்துடன் மட்டுமே தொடர்புடையது என்று உறுதி செய்துள்ளது.இது ஒரு சதித்திட்டத்தின் அடிப்படையிலான கொலையா அல்லது தனிப்பட்ட காரணமா என்பது குறித்து தற்போதுவரை எந்தக் கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை.சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மூன்று உள்ளூர் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடி வைக்கப்பட்டன. இந்த வழக்கு இப்போது ஒருங்கிணைந்த மனிதக் கொலை விசாரணைப் பிரிவுக்கு (Integrated Homicide Investigation Team) மாற்றப்பட்டுள்ளது.கவலையளிக்கும் சூழலில் நடந்த கொலைகனடாவில் இந்தியர்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்து வரும் ஒரு காலகட்டத்தில், இந்தத் தொழிலதிபரின் கொலை நடந்துள்ளது. மேலும், தென் ஆசிய சமூகங்கள் ஆதிக்கம் செலுத்தும் சில பகுதிகளில் சமீபகாலமாக பணப் பறிப்பு வழக்குகளும் (Extortion Cases) அதிகரித்து வருகின்றன.இருப்பினும், தர்ஷன் சிங் சாஹ்ஸியின் கொலைக்கும் பணப் பறிப்புக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் கொலையாளியின் நோக்கம் மற்றும் பின்னணி தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!